Approved Admin•••1
TaCyclopedia
TaCyclopedia
25/9/2016, 7:34 pm
தமிழகத்தில் சங்ககாலம் எனப்படும் கி.மு 300 கி.பி 2000 கால எல்லையிற் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இவை தொகை நூல்கள் என வழங்கப்படுகின்றன. பல நூல்களின் தொகுப்பே தொகை நூல்கள்.

பிற்காலத்திலே தொகைநூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனர். குறைந்த அடிகளுடைய நூல்களுக்கு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக்கொண்டவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டது. தவிர அவை எழுதிய காலவரிசையினைக் கொண்டும் இவ்வாறு பிரிக்கப்பட்டதாக கருத இடமுண்டு. மேற்கணக்கு நூல்கள் மூன்றடி முதல் ஆயிரம் அடிவரை எழுதப்படும் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் பரிபாடல் ஆகிய வகைகளில் எழுதப்பட்டவை. மாறாக கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.

பாட்டின் நீளத்தைக் கொண்டே இவ்வாறு வகைப்படுத்தினர்; பொருட்சுவையை எண்ணி அல்ல என்பதை இங்கு கருத்தில் நிறுத்த வேண்டும்.

பண்டைய தமிழக பண்பாட்டையும் வாழ்க்கைத்தரத்தையும் பெருமையையும் காண இப்பாடல் தொகுதிகள் துணை புரிகின்றன. தமிழருக்கு அகம் எனும் காதல் ஒழுக்கமும் புறம் எனும் வீர வெளிப்பாடுகளுமே இலக்கிய நோக்காக அமைந்தமை இப்பாடல் தொகுதிகளால் தெரியவரும்.

பொருளடக்கம்
பொருளடக்கம்:

Approved Admin•••2
TaCyclopedia
TaCyclopedia
25/9/2016, 7:45 pm
எட்டுத்தொகை நூல்கள்:

நற்றிணை:
இயற்றியவர் - 192 பெயர்கள் கிடைக்கப்பெற்றன.
பாடப்பட்டத் தலைவன் - பலர்

குறுந்தொகை:
இயற்றியவர் - 205 புலவர்கள்
பாடப்பட்டத் தலைவன் - பலர்

ஐங்குறுநூறு:
இயற்றியவர் - கபிலர்
பாடப்பட்டத் தலைவன் - பலர்

பதிற்றுப்பத்து:
இயற்றியவர் - பலர்
பாடப்பட்டத் தலைவன் - சேரர்

பரிபாடல்:
இயற்றியவர் - 13 புலவர்கள்

கலித்தொகை:
இயற்றியவர் - நல்லாண்டுவனார்

அகநானூறு:
இயற்றியவர் - பலர்
பாடப்பட்டத் தலைவன் - பலர்

புறநானூறு:
இயற்றியவர் - பலர்
பாடப்பட்டத் தலைவன் - பலர்

Approved Admin•••3
TaCyclopedia
TaCyclopedia
25/9/2016, 7:55 pm
பத்துப்பாட்டு நூல்கள்:

<திருமுருகாற்றுப்படை
பாடிய புலவர் - நக்கீரர்
பாட்டுடைத் தலைவன் - முருகன்

பொருநராற்றுப்படை
பாடிய புலவர் - முடத்தாமக்கண்ணியார்
பாட்டுடைத் தலைவன் - கரிகால் வளவன்

சிறுபாணாற்றுப்படை
பாடிய புலவர் - நற்றாத்தனார்
பாட்டுடைத் தலைவன் - நல்லியக்கோடன்

பெரும்பாணாற்றுப்படை
பாடிய புலவர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பாட்டுடைத் தலைவன் - தொண்டைமான் இளந்திரையன்

நெடுநல்வாடை
பாடிய புலவர் - நக்கீரர்
பாட்டுடைத் தலைவன் - நெடுஞ்செழியன்

குறிஞ்சிப் பாட்டு கபிலர்
பாடிய புலவர் - பிரகத்தனுக்கு தமிழர் கற்புநெறி பற்றி தெளிவிக்கப் பாடியது

முல்லைப்பாட்டு
பாடிய புலவர் - நப்பூதனார்
பாட்டுடைத் தலைவன் - நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது

மதுரைக் காஞ்சி
பாடிய புலவர் - மாங்குடி மருதனார்
பாட்டுடைத் தலைவன் - நெடுஞ்செழியன்

பட்டினப் பாலை
பாடிய புலவர் - கடியலுர் உருத்திரங் கண்ணனார்.
பாட்டுடைத் தலைவன் - கரிகால் வளவன்

மலைபடுகடாம்
பாடிய புலவர் - பெருங்குன்றப் பெருங்காசிகனார்.
பாட்டுடைத் தலைவன் - நவிரமலை நன்னன்

Approved Admin•••4
TaCyclopedia
TaCyclopedia
25/9/2016, 7:57 pm
வெளியிணைப்புகள்.....

•••5
Sponsored content

CREATE NEW TOPIC



Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...