அட்சய வருடப் பலன்: நல்லோர் செய்த பாக்கியமாய் முன் மழை உண்டு. சித்திரை, வைகாசி மாதங்களில் மழை மத்திமம். ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மழை உண்டு. புரட்டாசி மாதம் மழை கண்ட மண்டலம். ஐப்பசி, கார்த்திகை மார்கழி மாதங்கள் வரை மழை கண்ட மண்டலம். இம்மூன்று மாதத்திலும் விழுந்த இடம் விழுக்காடாய்ப் பெய்யும். தொண்ட மண்டலம் சுபீட்சக் குறைவு. பாண்டிய நாடு செழிக்கும்.
(இவை இடைக்காட்டார் அறுபது வருடப் பஞ்சாங்கப் பலன்படி கூறப்பட்டுள்ளன.)
(இவை இடைக்காட்டார் அறுபது வருடப் பஞ்சாங்கப் பலன்படி கூறப்பட்டுள்ளன.)